• Sep 08 2024

கொழும்பின் முக்கிய வீதியின் போக்குவரத்து தடை - மின்சாரமும் துண்டிப்பு

Chithra / Jul 11th 2024, 11:53 am
image

Advertisement


கொழும்பு - அவிசாவளை லோ லெவல் வீதியின் ரணால, சுடவில பிரதேசத்தில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனால் வேவிலைச் சந்தி மற்றும் சியாம்பலா கஸ் சந்தியிலிருந்து கனரக வாகனங்கள் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .

மேலும் , அப்பகுதி மக்களும், பொலிஸாரும் இணைந்து கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பின் முக்கிய வீதியின் போக்குவரத்து தடை - மின்சாரமும் துண்டிப்பு கொழும்பு - அவிசாவளை லோ லெவல் வீதியின் ரணால, சுடவில பிரதேசத்தில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .இதனால் வேவிலைச் சந்தி மற்றும் சியாம்பலா கஸ் சந்தியிலிருந்து கனரக வாகனங்கள் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .மேலும் , அப்பகுதி மக்களும், பொலிஸாரும் இணைந்து கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement