• Apr 19 2026

ஒன்றரை வயது குழந்தையை பலியெடுத்த விபத்து - மன்னாரில் துயரம்

Chithra / Apr 19th 2026, 12:26 pm
image

மன்னார், தாழ்வுபாடு, தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.


பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் காயமடைந்த குழந்தை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 01 வயது 06 மாதங்களான குழந்தை என தெரியவந்துள்ளது. 


மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


இதேவேளை, அக்மீமன, காலி - உடுகம வீதியின் படதுவ பகுதியில் காலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடந்த பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


விபத்தில் காயமடைந்த  பெண்ணும் மோட்டார் சைக்கிள் சாரதியும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், பெண் உயிரிழந்துள்ளார். 


இவ்வாறு உயிரிழந்தவர் படதுவ, போகஹவத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார். அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒன்றரை வயது குழந்தையை பலியெடுத்த விபத்து - மன்னாரில் துயரம் மன்னார், தாழ்வுபாடு, தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த குழந்தை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 01 வயது 06 மாதங்களான குழந்தை என தெரியவந்துள்ளது. மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, அக்மீமன, காலி - உடுகம வீதியின் படதுவ பகுதியில் காலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடந்த பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த  பெண்ணும் மோட்டார் சைக்கிள் சாரதியும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், பெண் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் படதுவ, போகஹவத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார். அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement