• Apr 28 2024

வீதியைக் கடக்க முற்பட்ட போது விபரீதம்...! பெண் பரிதாப மரணம்...!

Sharmi / Mar 14th 2024, 8:43 am
image

Advertisement

வீதியைக் கடக்க முயன்ற பெண்ணொருவர் பஸ் ஒன்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வென்னப்புவ நகரில் வீதியைக் கடக்க முயன்ற பெண்ணொருவர் பயணிகள் பஸ் ஒன்றில் மோதி நேற்று (13) உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதசாரிகள் குழுவொன்று வீதியைக் கடக்கும்போது, நீர்கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு மீண்டும் முன்னோக்கிச் செல்ல முற்பட்டபோது, முன்பக்கமாக வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த பெண் மீது பஸ் மோதியுள்ளதுடன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுவில, ஜயா மாவத்தையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வீதியைக் கடக்க முற்பட்ட போது விபரீதம். பெண் பரிதாப மரணம். வீதியைக் கடக்க முயன்ற பெண்ணொருவர் பஸ் ஒன்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வென்னப்புவ நகரில் வீதியைக் கடக்க முயன்ற பெண்ணொருவர் பயணிகள் பஸ் ஒன்றில் மோதி நேற்று (13) உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாதசாரிகள் குழுவொன்று வீதியைக் கடக்கும்போது, நீர்கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு மீண்டும் முன்னோக்கிச் செல்ல முற்பட்டபோது, முன்பக்கமாக வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த பெண் மீது பஸ் மோதியுள்ளதுடன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லுனுவில, ஜயா மாவத்தையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement