• Sep 21 2024

இனவாதி அநுரவுக்கு துரோகி சுமந்திரன் வக்காலத்து வாங்குகிறார்- தம்பிராஜா ஆவேசம்!

Tamil nila / Sep 9th 2024, 8:57 pm
image

Advertisement

தமிழ் மக்களை இரத்தமும் சதையுமாக கொன்றொழித்த ஜே.வி.பி அநுரவுக்கு தமிழ் மக்களுக்கு எதிராக துரோகங்களை மேற்கொண்ட சுமந்திரன் வக்காலத்து வாங்குகிறார் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பி ராஜா குற்றம் சாட்டினார் .

நேற்றைய தினம் திங்கட்கிழமை யா ஊடகாமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்

அண்மையில் யாழ்ப்பாணம் வருகை ஜேவிபி என்ற  பெயர் மாற்றப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார தமிழ் மக்களை மிரட்டுகிறார் என யாழ்ப்பாணம் வருகை தந்த மற்றும் ஒரு வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். 

இருவரைப் பொறுத்த வரையிலும் பழைய வரலாறுகளை தேடிப் பார்த்தால் இருவர் சார்ந்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட இனவாதிகள்.

அவர்கள் தங்களுக்குள் யார் நல்லவர் என்பது தொடர்பில் அடிபட்டு கொள்ளட்டும் தமிழ் மக்களுக்கு அது பிரச்சனை அல்ல. 

ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்காக ஒருவரால் அநுரகுமார ஜேவிபி பானியில் வடக்கு  மற்றும் தெற்கு மக்களை மிரட்டுகிறார் என கூறுகிறார். 

அநுர கூறுகிறார் தான் மிரட்டவில்லை ரணில் தான் இனவாதத்தை கக்கி வாக்குகளை பெற முயற்சிக்கிறார் என கூறுகிறார். 

இது இவ்வாறு இருக்க தமிழரசு கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தமிழ் மக்களுக்கு பல துரோகங்களை செய்தவர் அவர் அநுர அவ்வாறு மிரட்டவில்லை என வக்காளத்து வாங்குகிறார். 

சுமந்திரன் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்பது மக்களுக்குத் தெரியும் தற்போது தென் இலங்கை வேட்பாளருக்கு வாக்காளத்து வாங்குகிறார்.

ஆகவே தமிழ் மக்கள் இனவாதிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதோடு இனவாதிகளையும் துரோகிகளையும் தேர்தல் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இனவாதி அநுரவுக்கு துரோகி சுமந்திரன் வக்காலத்து வாங்குகிறார்- தம்பிராஜா ஆவேசம் தமிழ் மக்களை இரத்தமும் சதையுமாக கொன்றொழித்த ஜே.வி.பி அநுரவுக்கு தமிழ் மக்களுக்கு எதிராக துரோகங்களை மேற்கொண்ட சுமந்திரன் வக்காலத்து வாங்குகிறார் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பி ராஜா குற்றம் சாட்டினார் .நேற்றைய தினம் திங்கட்கிழமை யா ஊடகாமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்அண்மையில் யாழ்ப்பாணம் வருகை ஜேவிபி என்ற  பெயர் மாற்றப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார தமிழ் மக்களை மிரட்டுகிறார் என யாழ்ப்பாணம் வருகை தந்த மற்றும் ஒரு வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். இருவரைப் பொறுத்த வரையிலும் பழைய வரலாறுகளை தேடிப் பார்த்தால் இருவர் சார்ந்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட இனவாதிகள்.அவர்கள் தங்களுக்குள் யார் நல்லவர் என்பது தொடர்பில் அடிபட்டு கொள்ளட்டும் தமிழ் மக்களுக்கு அது பிரச்சனை அல்ல. ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்காக ஒருவரால் அநுரகுமார ஜேவிபி பானியில் வடக்கு  மற்றும் தெற்கு மக்களை மிரட்டுகிறார் என கூறுகிறார். அநுர கூறுகிறார் தான் மிரட்டவில்லை ரணில் தான் இனவாதத்தை கக்கி வாக்குகளை பெற முயற்சிக்கிறார் என கூறுகிறார். இது இவ்வாறு இருக்க தமிழரசு கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தமிழ் மக்களுக்கு பல துரோகங்களை செய்தவர் அவர் அநுர அவ்வாறு மிரட்டவில்லை என வக்காளத்து வாங்குகிறார். சுமந்திரன் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்பது மக்களுக்குத் தெரியும் தற்போது தென் இலங்கை வேட்பாளருக்கு வாக்காளத்து வாங்குகிறார்.ஆகவே தமிழ் மக்கள் இனவாதிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதோடு இனவாதிகளையும் துரோகிகளையும் தேர்தல் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement