• Jul 04 2024

இரா.சம்பந்தனுக்கு வட்டுக்கோட்டையில் அஞ்சலி...!

Sharmi / Jul 2nd 2024, 8:46 am
image

Advertisement

மறைந்த, இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு  இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் நேற்றையதினம்(01)இடம்பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில்,  துயரின் வெளிப்பாடாக அலுவலகத்தின் முன்றலில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

தொடர்சியாக, சம்பந்தனின் திருவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளிர் அணி, தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இரா.சம்பந்தனுக்கு வட்டுக்கோட்டையில் அஞ்சலி. மறைந்த, இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு  இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் நேற்றையதினம்(01)இடம்பெற்றது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில்,  துயரின் வெளிப்பாடாக அலுவலகத்தின் முன்றலில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.தொடர்சியாக, சம்பந்தனின் திருவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.இந்நிகழ்வில்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளிர் அணி, தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement