• May 10 2024

ஜனவரி முதல் சிக்கல்..! 40ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் ஒரு குடும்பத்தின் செலவு..?

Chithra / Dec 30th 2023, 9:32 am
image

Advertisement


  

அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் அடுத்த வருடம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு, பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர முடியும்  என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அரச வருமானம்  மற்றும் டொலர் கையிருப்பை அதிகரிப்பது மிகவும் சவால்மிக்க விடயமாகும்.

என்றாலும் ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையாக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால் இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திர நிலையை அடைந்து வருவதை தரவுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த வருடத்தில் நேற்று முன்தினம் 28ஆம் திகதிவரை வரி வருமானமாக 2720 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றிருக்கிறது.

அதேபோன்று வரி அல்லாத வருமானமாக 253 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதன் பிரகாரம் மொத்த தேசிய வருமானம் 2973 பில்லியன் ரூபா இதுவரை பதிவாகி இருக்கிறது.

அத்துடன் ஜனவரி முதல் வற்வரி அதிகரிக்கப்படுவதன் மூலம் ஒரு குடும்பத்தின் செலவு 40ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.

ஏனெனில் வரி விதிக்கப்பட்டிருக்கும் பொருட்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் இந்த வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருக்கின்றன. 

அதேநேரம் வரி அதிகரிக்கப்படுவதால் பணவீக்கம் நூற்றுக்கு 2அல்லது 3வீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. 

என்றாலும்  அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களிடமிருந்து முறையாக வரிகளை அறவிட நடவடிக்கை எடுத்தால் பணவீக்கத்தை குறைத்துக்காெள்ள முடியும்.

அதனால் அடுத்த வருடத்தில் இருந்து வரி செலுத்த வேண்டிய நிறுவனங்கள் தொடர்பாக கண்காணிக்க முறையான வேலைத்திட்டம் அமைத்திருக்கிறோம் என்றார்.

ஜனவரி முதல் சிக்கல். 40ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் ஒரு குடும்பத்தின் செலவு.   அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் அடுத்த வருடம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு, பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர முடியும்  என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அரச வருமானம்  மற்றும் டொலர் கையிருப்பை அதிகரிப்பது மிகவும் சவால்மிக்க விடயமாகும்.என்றாலும் ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையாக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால் இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திர நிலையை அடைந்து வருவதை தரவுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.இந்த வருடத்தில் நேற்று முன்தினம் 28ஆம் திகதிவரை வரி வருமானமாக 2720 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றிருக்கிறது.அதேபோன்று வரி அல்லாத வருமானமாக 253 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதன் பிரகாரம் மொத்த தேசிய வருமானம் 2973 பில்லியன் ரூபா இதுவரை பதிவாகி இருக்கிறது.அத்துடன் ஜனவரி முதல் வற்வரி அதிகரிக்கப்படுவதன் மூலம் ஒரு குடும்பத்தின் செலவு 40ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.ஏனெனில் வரி விதிக்கப்பட்டிருக்கும் பொருட்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் இந்த வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம் வரி அதிகரிக்கப்படுவதால் பணவீக்கம் நூற்றுக்கு 2அல்லது 3வீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. என்றாலும்  அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களிடமிருந்து முறையாக வரிகளை அறவிட நடவடிக்கை எடுத்தால் பணவீக்கத்தை குறைத்துக்காெள்ள முடியும்.அதனால் அடுத்த வருடத்தில் இருந்து வரி செலுத்த வேண்டிய நிறுவனங்கள் தொடர்பாக கண்காணிக்க முறையான வேலைத்திட்டம் அமைத்திருக்கிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement