• Sep 20 2024

கம்பஹாவில் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டில் இருவர் பாதிப்பு..!

Sharmi / Aug 7th 2024, 8:56 am
image

Advertisement

கம்பஹா தம்மிட்ட பிரதேசத்திலும், ஜாஎல மகேவிட்ட பிரதேசத்திலும் நேற்று(06) இரவு இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா தலைமையக பொலிஸார் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தம்மிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 29 வயதுடைய நபர் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர்.

குறித்த நபர் கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சைக்காக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, ஜாஎல மகேவிட்ட பிரதேசத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பஹாவில் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டில் இருவர் பாதிப்பு. கம்பஹா தம்மிட்ட பிரதேசத்திலும், ஜாஎல மகேவிட்ட பிரதேசத்திலும் நேற்று(06) இரவு இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கம்பஹா தலைமையக பொலிஸார் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தம்மிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 29 வயதுடைய நபர் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர்.குறித்த நபர் கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சைக்காக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஜாஎல மகேவிட்ட பிரதேசத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement