• May 03 2024

கண்ணீர் புகை குண்டுகளை வீசியபடி நாடாளுமன்றத்திற்குள் பாய்ந்த இருவர்..! எம்.பிக்கள் பரபரப்பு

Chithra / Dec 13th 2023, 2:40 pm
image

Advertisement

 


இந்திய நாடாளுமன்றத்தின் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து சபை நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிக்குள் இருவர் குதித்து புகைக்குண்டு வீசியதால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவைக்குள் குதித்தவர்களை கைதுசெய்ய முயன்றவேளை அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றிவளைத்து பிடித்து டெல்லி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் மீது ஏறி குதித்து கலர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

நாடாளுமன்ற தாக்குதல் நடந்த 22ம் ஆண்டு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மக்களவையில் புகை மூட்டம் சூழ்ந்ததால் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

கண்ணீர் புகை குண்டுகளை வீசியபடி நாடாளுமன்றத்திற்குள் பாய்ந்த இருவர். எம்.பிக்கள் பரபரப்பு  இந்திய நாடாளுமன்றத்தின் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து சபை நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிக்குள் இருவர் குதித்து புகைக்குண்டு வீசியதால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அவைக்குள் குதித்தவர்களை கைதுசெய்ய முயன்றவேளை அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றிவளைத்து பிடித்து டெல்லி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் மீது ஏறி குதித்து கலர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.நாடாளுமன்ற தாக்குதல் நடந்த 22ம் ஆண்டு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மக்களவையில் புகை மூட்டம் சூழ்ந்ததால் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement