• Oct 19 2024

தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற இந்தியர் உட்பட்ட இருவர் மன்னாரில் கைது!samugammedia

Sharmi / Apr 15th 2023, 10:19 pm
image

Advertisement

இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட இந்தியர் உட்பட்ட இருவர் இராணுவத்தினரால்  கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து 2020ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த சமயம் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெறும் ஓர் இந்தியரின் கடவுச் சீட்டு நீதிமன்ற தடுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீதிமன்றத் தடுப்பில் உள்ள இந்தியப் பிரஜை குருநாகலைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் மன்னார் வந்துள்ளார்.

இவ்வாறு மன்னாரில் இருந்து படகு மூலம் தமிழ் நாட்டிற்குத் தப்பிச் செல்ல முற்பட்டதாகவே இராணுவத்தினர்  கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

தமிழ்நாடு இளையார்குடியைச் சேர்ந்த 38 வயதுடையவரும், இலங்கையின் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற இந்தியர் உட்பட்ட இருவர் மன்னாரில் கைதுsamugammedia இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட இந்தியர் உட்பட்ட இருவர் இராணுவத்தினரால்  கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் இருந்து 2020ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த சமயம் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெறும் ஓர் இந்தியரின் கடவுச் சீட்டு நீதிமன்ற தடுப்பில் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நீதிமன்றத் தடுப்பில் உள்ள இந்தியப் பிரஜை குருநாகலைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் மன்னார் வந்துள்ளார். இவ்வாறு மன்னாரில் இருந்து படகு மூலம் தமிழ் நாட்டிற்குத் தப்பிச் செல்ல முற்பட்டதாகவே இராணுவத்தினர்  கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.தமிழ்நாடு இளையார்குடியைச் சேர்ந்த 38 வயதுடையவரும், இலங்கையின் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement