• Sep 20 2024

கல்வி கற்க சென்ற இரு பாடசாலை மாணவிகள் திடீரென மாயம்; தாய் பொலிஸில் முறைப்பாடு

Chithra / Aug 16th 2024, 2:45 pm
image

Advertisement


மொனராகலை - வெல்லவாய, கொட்டவெஹெரகல  பிரதேசத்தில் வசிக்கும் பதினைந்து வயதுடைய இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவிகள் நேற்று (15) முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரு மாணவிகளும் வெல்லவாய பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்பவர்கள் என தெரியவந்துள்ளது. 

கொட்டவெஹெரகலயாய பிரதேசத்தில் வசித்து வரும் மாணவி, அதே கிராமத்தில் வசிக்கும் இவரது நண்பி  வீட்டிற்கு 14ஆம் திகதி மாலை  கல்வி கற்பதற்காக வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மறுநாள் காலை இரண்டு பெண்களும் வீட்டில் இல்லையென அப்பெண்ணின் தாய் வெல்லவாய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கல்வி கற்க சென்ற இரு பாடசாலை மாணவிகள் திடீரென மாயம்; தாய் பொலிஸில் முறைப்பாடு மொனராகலை - வெல்லவாய, கொட்டவெஹெரகல  பிரதேசத்தில் வசிக்கும் பதினைந்து வயதுடைய இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த மாணவிகள் நேற்று (15) முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த இரு மாணவிகளும் வெல்லவாய பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்பவர்கள் என தெரியவந்துள்ளது. கொட்டவெஹெரகலயாய பிரதேசத்தில் வசித்து வரும் மாணவி, அதே கிராமத்தில் வசிக்கும் இவரது நண்பி  வீட்டிற்கு 14ஆம் திகதி மாலை  கல்வி கற்பதற்காக வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மறுநாள் காலை இரண்டு பெண்களும் வீட்டில் இல்லையென அப்பெண்ணின் தாய் வெல்லவாய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இதையடுத்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement