• Sep 29 2024

13 வயது சிறுமியின் உயிரை பறித்த இரண்டு மாத்திரைகள்..! இலங்கையில் அதிர்ச்சிச் சம்பவம் samugammedia

Chithra / Nov 10th 2023, 1:27 pm
image

Advertisement

 

பாடசாலை மாணவி ஒருவர் இன்று (10) காலை இரண்டு மாத்திரைகளை விழுங்கியதால் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலப்பிட்டிய மரதான பிரதேசத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பலப்பிட்டியவில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய வலிமுனி டினுஜி மௌவிஸ்ம மென்டிஸ்  என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த சிறுமி வீட்டில் இருந்து இரண்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாகவும், 

அவற்றை பயன்படுத்தியதால் மாணவி உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று (10) பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி திருமதி கே.கவாகராச்சியினால் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

13 வயது சிறுமியின் உயிரை பறித்த இரண்டு மாத்திரைகள். இலங்கையில் அதிர்ச்சிச் சம்பவம் samugammedia  பாடசாலை மாணவி ஒருவர் இன்று (10) காலை இரண்டு மாத்திரைகளை விழுங்கியதால் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பலப்பிட்டிய மரதான பிரதேசத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலப்பிட்டியவில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய வலிமுனி டினுஜி மௌவிஸ்ம மென்டிஸ்  என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த சிறுமி வீட்டில் இருந்து இரண்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தியதால் மாணவி உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று (10) பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி திருமதி கே.கவாகராச்சியினால் நடத்தப்படவுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement