• Jul 27 2024

நாட்டில் சீரற்ற காலநிலை 36ஆயிரம் பேர் பாதிப்பு!

Anaath / May 24th 2024, 4:19 pm
image

Advertisement

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 9688 குடும்பங்களை சேர்ந்த 35796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா, புத்தளம் ,காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில், கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில்  3503  குடும்பங்களை சேர்ந்த 12150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர்  உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார் 60 குடும்பங்களை சேர்ந்த  190 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை குருநாகல் மாவட்டத்தில் 47 குடும்பங்ககள்  உட்பட 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 36 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

மேல்மாகாணத்தில் 4814 குடும்பங்கள் உட்பட 19527 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 386 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இந்த மாகாணத்தில் 14 குடும்பங்களை   சேர்ந்துள்ள 56 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 களுத்துறை மாவட்டத்தில் 247 குடும்பங்களை  சேர்ந்துள்ள 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. மற்றும் 213 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதே வேளை 3 குடும்பங்களை சேர்ந்துள்ள 13 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கம்பஹா மாவட்டத்தில் 4210 குடும்பங்களை சேர்ந்துள்ள 17073 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 11 குடும்பங்களை சேர்ந்துள்ள 43 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பில் 357 குடும்பங்கள் உட்பட 1534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 19 குடும்பங்கள் உட்பட 71 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை தென்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தங்களால் 227 பேர் உட்பட 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 213 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் 91 குடும்பங்கள்  உட்பட 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 79 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு, மற்றும் காற்றினால் 134 குடும்பங்கள் உட்பட 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 132 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

மேலும் வடமாகாணத்தில் 443 குடும்பங்களை சேர்ந்துள்ள 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

 கிளிநொச்சி மாவட்டதில்  436 குடும்பங்களை சேர்ந்துள்ள 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன..

யாழில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

சப்பிரகமுவ மாகாணத்தில் 416 குடும்பங்களை சேர்ந்துள்ள 1550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் 6 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளளதுடன் 393 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

இரத்தினபுரி மாவட்டத்தில் 374 குடும்பங்களை  சேர்ந்த1387 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  6 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 3 வீடுகள் முழுமையாகவும் 351 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கேகாலை மாவட்டத்தில் 416 குடும்பங்களை சேர்ந்த 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


நாட்டில் சீரற்ற காலநிலை 36ஆயிரம் பேர் பாதிப்பு இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 9688 குடும்பங்களை சேர்ந்த 35796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நுவரெலியா, புத்தளம் ,காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதுஅந்த வகையில், கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில்  3503  குடும்பங்களை சேர்ந்த 12150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர்  உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார் 60 குடும்பங்களை சேர்ந்த  190 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதே வேளை குருநாகல் மாவட்டத்தில் 47 குடும்பங்ககள்  உட்பட 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 36 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.மேல்மாகாணத்தில் 4814 குடும்பங்கள் உட்பட 19527 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 386 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இந்த மாகாணத்தில் 14 குடும்பங்களை   சேர்ந்துள்ள 56 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 247 குடும்பங்களை  சேர்ந்துள்ள 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. மற்றும் 213 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதே வேளை 3 குடும்பங்களை சேர்ந்துள்ள 13 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 4210 குடும்பங்களை சேர்ந்துள்ள 17073 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 11 குடும்பங்களை சேர்ந்துள்ள 43 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் 357 குடும்பங்கள் உட்பட 1534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 19 குடும்பங்கள் உட்பட 71 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதே வேளை தென்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தங்களால் 227 பேர் உட்பட 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 213 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் 91 குடும்பங்கள்  உட்பட 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 79 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.மாத்தறை மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு, மற்றும் காற்றினால் 134 குடும்பங்கள் உட்பட 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 132 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனமேலும் வடமாகாணத்தில் 443 குடும்பங்களை சேர்ந்துள்ள 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டதில்  436 குடும்பங்களை சேர்ந்துள்ள 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.யாழில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனசப்பிரகமுவ மாகாணத்தில் 416 குடும்பங்களை சேர்ந்துள்ள 1550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் 6 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளளதுடன் 393 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 374 குடும்பங்களை  சேர்ந்த1387 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  6 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 3 வீடுகள் முழுமையாகவும் 351 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.கேகாலை மாவட்டத்தில் 416 குடும்பங்களை சேர்ந்த 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement