களுத்துறை வடக்கு பொலிஸார் இன்று காலை களுத்துறை பாடசாலை மாணவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.
போஸ் பயிற்சிக் கல்லூரியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போதைப்பொருள் மோப்ப நாயான டேலியும் சோதனைக்கு வரவழைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள் ஐஸ் போதைப்பொருளுக்கு இழுக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ள பொலிஸார் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் இன்று நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளுக்கு அருகில் பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் ஜனவரி மாதம் முதல்,நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு - புத்தகப் பைகள் பத்திரம் களுத்துறை வடக்கு பொலிஸார் இன்று காலை களுத்துறை பாடசாலை மாணவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.போஸ் பயிற்சிக் கல்லூரியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போதைப்பொருள் மோப்ப நாயான டேலியும் சோதனைக்கு வரவழைக்கப்பட்டது.பாடசாலை மாணவர்கள் ஐஸ் போதைப்பொருளுக்கு இழுக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ள பொலிஸார் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.அத்துடன் இன்று நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளுக்கு அருகில் பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.மேலும் ஜனவரி மாதம் முதல்,நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.