• May 22 2024

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பில் இதுவரை கைது செய்யப்படாத ஐந்தாவது சந்தேக நபர்! - 8 பேரிடம் இன்று விசாரணை!

Chithra / Dec 5th 2023, 10:16 am
image

Advertisement

 

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கின் பிரதான சாட்சி கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் இதுவரை ஐந்தாவது சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை.

இளைஞன் சாட்சியம் கூறி 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஐந்தாவது சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை.

அதேவேளை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் இளைஞரின் உயிரிழப்பின் போது கடமையிலிருந்த மேலும் 07 உத்தியோகத்தர்களிடமும் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இன்று  மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் மரண சாட்சி விசாரணை நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது 28 வயதான நாகராஜா அலெக்ஸ் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு யாழ்.நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பில் இதுவரை கைது செய்யப்படாத ஐந்தாவது சந்தேக நபர் - 8 பேரிடம் இன்று விசாரணை  வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கின் பிரதான சாட்சி கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் இதுவரை ஐந்தாவது சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை.இளைஞன் சாட்சியம் கூறி 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஐந்தாவது சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை.அதேவேளை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் இளைஞரின் உயிரிழப்பின் போது கடமையிலிருந்த மேலும் 07 உத்தியோகத்தர்களிடமும் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளது.இன்று  மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் மரண சாட்சி விசாரணை நடத்தப்படவுள்ளது.யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது 28 வயதான நாகராஜா அலெக்ஸ் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு யாழ்.நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement