• Oct 07 2024

சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் காணொளிகளை வெளியிடுவோருக்கு எச்சரிக்கை!

Chithra / Oct 6th 2024, 8:44 am
image

Advertisement

 

சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுவதினை தவிர்க்குமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொளிகள் மூலம் குழந்தைகளின் ஆளுமை, அடையாளம் மற்றும் குழந்தையின் குடும்ப பின்னணி என்பன அவர்களின் பாதுகாப்பிற்கு பிரச்சினையாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே குழந்தைகளின்  பாதுகாப்புக்கு தொடர்பில் அனைத்து மக்களும் பொறுப்புடன் செயற்படுமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுவதன் மூலம் இணையம் மூலம் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, ​​அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் காணொளிகளை வெளியிடுவோருக்கு எச்சரிக்கை  சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுவதினை தவிர்க்குமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொளிகள் மூலம் குழந்தைகளின் ஆளுமை, அடையாளம் மற்றும் குழந்தையின் குடும்ப பின்னணி என்பன அவர்களின் பாதுகாப்பிற்கு பிரச்சினையாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே குழந்தைகளின்  பாதுகாப்புக்கு தொடர்பில் அனைத்து மக்களும் பொறுப்புடன் செயற்படுமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுவதன் மூலம் இணையம் மூலம் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் ஆணையம் எச்சரித்துள்ளது.இதேவேளை க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, ​​அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement