• Sep 20 2024

தேசிய தலைவரின் வழிகாட்டலில் வந்தவர்கள் நாங்கள் - அங்கஜனின் கருத்திற்கு கஜேந்திரர்கள் பதிலடி! SamugamMedia

Tamil nila / Feb 16th 2023, 5:29 pm
image

Advertisement

இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்துள்ள காட்டிக்கொடுக்கின்ற வேலைகளை செய்கின்ற அங்கஜன் இராமநாதன்,தங்களை நோக்கி கேள்வி எழுப்புவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு ஆடைகளை கிழித்து சிறைக்கு சென்று ஒரு நாடகமாடியிருந்ததாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

கடந்த 30 வருடங்களாக காட்டிக்கொடுக்கின்ற வேலையை செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் செ.கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தேசியத்தலைவர் பிரபாகரனின் நேரடி வாழிகாட்டலின் கீழ் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் விடுதலைக்கான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்தியிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 13 வருடங்களாக தெருவில் நின்று மக்களுக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியே போராடுவதாகவும் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மக்கள் உரிய நேரத்தில் உரிய பதில்களை வழங்குவார்கள் என்றும் செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை அங்கஜன் இராமநாதன் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே பாரிய மோசடியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்காலத்தில் எந்தளவு தூரம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

தேசிய தலைவரின் வழிகாட்டலில் வந்தவர்கள் நாங்கள் - அங்கஜனின் கருத்திற்கு கஜேந்திரர்கள் பதிலடி SamugamMedia இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்துள்ள காட்டிக்கொடுக்கின்ற வேலைகளை செய்கின்ற அங்கஜன் இராமநாதன்,தங்களை நோக்கி கேள்வி எழுப்புவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தினத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு ஆடைகளை கிழித்து சிறைக்கு சென்று ஒரு நாடகமாடியிருந்ததாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.கடந்த 30 வருடங்களாக காட்டிக்கொடுக்கின்ற வேலையை செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் செ.கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.தேசியத்தலைவர் பிரபாகரனின் நேரடி வாழிகாட்டலின் கீழ் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் விடுதலைக்கான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்தியிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 13 வருடங்களாக தெருவில் நின்று மக்களுக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியே போராடுவதாகவும் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே மக்கள் உரிய நேரத்தில் உரிய பதில்களை வழங்குவார்கள் என்றும் செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.இதேவேளை அங்கஜன் இராமநாதன் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே பாரிய மோசடியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்காலத்தில் எந்தளவு தூரம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement