• May 03 2024

வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்...! புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் சுட்டிக்காட்டு...!

Sharmi / Mar 13th 2024, 11:26 am
image

Advertisement

வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தெளிவான பிணைப்பு அல்ல எனவும்  புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ர்  முஸ‌ம்மில் அபூசாலி தெரிவித்துள்ளார்.

அம்பாறை கல்முனை பகுதியில் அமைந்துள்ள புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சியின் அலுவலகத்தில் இன்று(13)  நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு காலத்தில் பலமான கட்சியாக காணப்பட்ட  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன்று பல்வேறு தளம்பல் நிலையில் உள்ளது.

தற்போதுள்ள எதிர்கால சந்ததியினர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை நம்பக்கூடிய நிலையில் அதன் பயணங்கள் அமையவில்லை.

மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப்க்கு பின்னால் முஸ்லீம் சமூகம் அதன் உரிமைகளை பெற்றுக்கொள்வதில் தவறி உள்ளது.

அந்த நிலைமை மாறி நாங்கள் எமது உரிமைகளையும் நம் சமூக  கட்டமைப்புக்களையும் பாதுகாத்து கொண்டு சரியாக அரசியலை நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக எமது புதிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பமும் முடிவும் அமைந்திருக்கும்.

அதுமாத்திரமன்றி எதிர்காலங்களில் இளைஞர்களுக்கு சரியான அரசியலில் வழிகாட்ட வேண்டும்.இந்த அரசியலின் ஊடாக இளைஞர்கள் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்.

இலங்கையில் முஸ்லீம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது.பொருளாதார ரீதியான பிரச்சினை காணிப்பிரச்சினை நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இப்பிரச்சினைகளுக்கான தீர்வாக எமது கட்சி அமையும்.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தெளிவான பிணைப்பு அல்ல.தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தாலும் மூன்று  சமூகங்கள் மத ரீதியாக கலந்துள்ளோம்.

தற்போது இருக்கின்ற வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும். புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் சுட்டிக்காட்டு. வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தெளிவான பிணைப்பு அல்ல எனவும்  புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ர்  முஸ‌ம்மில் அபூசாலி தெரிவித்துள்ளார்.அம்பாறை கல்முனை பகுதியில் அமைந்துள்ள புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சியின் அலுவலகத்தில் இன்று(13)  நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஒரு காலத்தில் பலமான கட்சியாக காணப்பட்ட  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன்று பல்வேறு தளம்பல் நிலையில் உள்ளது.தற்போதுள்ள எதிர்கால சந்ததியினர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை நம்பக்கூடிய நிலையில் அதன் பயணங்கள் அமையவில்லை.மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப்க்கு பின்னால் முஸ்லீம் சமூகம் அதன் உரிமைகளை பெற்றுக்கொள்வதில் தவறி உள்ளது.அந்த நிலைமை மாறி நாங்கள் எமது உரிமைகளையும் நம் சமூக  கட்டமைப்புக்களையும் பாதுகாத்து கொண்டு சரியாக அரசியலை நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக எமது புதிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பமும் முடிவும் அமைந்திருக்கும்.அதுமாத்திரமன்றி எதிர்காலங்களில் இளைஞர்களுக்கு சரியான அரசியலில் வழிகாட்ட வேண்டும்.இந்த அரசியலின் ஊடாக இளைஞர்கள் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்.இலங்கையில் முஸ்லீம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது.பொருளாதார ரீதியான பிரச்சினை காணிப்பிரச்சினை நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.இப்பிரச்சினைகளுக்கான தீர்வாக எமது கட்சி அமையும்.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தெளிவான பிணைப்பு அல்ல.தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தாலும் மூன்று  சமூகங்கள் மத ரீதியாக கலந்துள்ளோம்.தற்போது இருக்கின்ற வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement