முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை வழங்கிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது 1700 ரூபாய் போதும் என்கிறார். ஆகவே பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தின் உண்மை தன்மை என்னவென்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், அரச இயந்திரத்தை பலமுடையதாக்க வேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு காணப்படுமாயின் தேசிய கொள்கை சபையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராகவே இருக்கிறோம்.
அரச பழிவாங்கல் பற்றி தற்போது பேசப்படுகிறது. இதற்கு ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்.
அரசியல் வழிபாங்களுக்கு அச்சமடைந்து அரச சேவையாளர்கள் சேவை கட்டமைப்பில் அதிருப்தியடைந்துள்ளார்கள். இந்நிலைமை நீடித்தால் அரச சேவை கட்டமைப்பு முழுமையாக பலவீனமடையும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படவில்லை. இந்த அரசாங்கமும் வழங்கவில்லை. இதனை வரவேற்கிறோம்.
இருப்பினும் எமது அரசாங்கத்தின் அரச சேவையில் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்றுத்துறையினருக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கபட்டது. ஆனால் தற்போது ஏதும் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்கினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 1700 ரூபாய் வழங்கினார்.
இந்த 1700 ரூபாய் போதாது என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஆனால் தற்போது 1700 ரூபாய் போதும் என்கிறார். ஆகவே பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தின் உண்மைத்தன்மை என்ன? என கேள்வி எழுப்பினார்.
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசின் உண்மைத்தன்மை என்ன நாமல் கேள்வி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை வழங்கிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது 1700 ரூபாய் போதும் என்கிறார். ஆகவே பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தின் உண்மை தன்மை என்னவென்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும், அரச இயந்திரத்தை பலமுடையதாக்க வேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு காணப்படுமாயின் தேசிய கொள்கை சபையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராகவே இருக்கிறோம்.அரச பழிவாங்கல் பற்றி தற்போது பேசப்படுகிறது. இதற்கு ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும். அரசியல் வழிபாங்களுக்கு அச்சமடைந்து அரச சேவையாளர்கள் சேவை கட்டமைப்பில் அதிருப்தியடைந்துள்ளார்கள். இந்நிலைமை நீடித்தால் அரச சேவை கட்டமைப்பு முழுமையாக பலவீனமடையும்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படவில்லை. இந்த அரசாங்கமும் வழங்கவில்லை. இதனை வரவேற்கிறோம். இருப்பினும் எமது அரசாங்கத்தின் அரச சேவையில் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்றுத்துறையினருக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கபட்டது. ஆனால் தற்போது ஏதும் இல்லை.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்கினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 1700 ரூபாய் வழங்கினார். இந்த 1700 ரூபாய் போதாது என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.ஆனால் தற்போது 1700 ரூபாய் போதும் என்கிறார். ஆகவே பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தின் உண்மைத்தன்மை என்ன என கேள்வி எழுப்பினார்.