யூடியூப் வீடியோ பார்த்து கணவரைக் கொலை செய்ய மனைவி முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் ராஜஸ்தானில் குறித்த அதிர்ச்சிச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பன்மனிவாடியில் வசிக்கும் மணிஷ் ரத்தோட் என்பவரின் மனைவி சரோஜ்,
இவர்களுக்கு இடையிலே தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் இடம்பெற்று வந்துள்ளது இந்தநிலையில் சம்பவ தினம்
கணவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது அவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி, வீட்டை பூட்டி விட்டு மனைவி வெளியே வந்துவிட்டார்
இந்நிலையில் கணவர் அலறித் துடித்து கதறிய போதும் மனைவி கதவை திறக்கவில்லை. பின்னர் பிள்ளைகளின் கதறலுக்குப் பிறகே மனைவி கதவை திறந்துள்ளார்.
ஏற்கனவே யூடியூப்பில் பார்த்த வீடியோ ஒன்றை அடிப்படையாக கொண்டு இந்த செயலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சரோஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
யூடியூபில் வீடியோ பார்த்து கணவனின் கதையை முடிக்க முயன்ற மனைவி கைது யூடியூப் வீடியோ பார்த்து கணவரைக் கொலை செய்ய மனைவி முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவின் ராஜஸ்தானில் குறித்த அதிர்ச்சிச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பன்மனிவாடியில் வசிக்கும் மணிஷ் ரத்தோட் என்பவரின் மனைவி சரோஜ், இவர்களுக்கு இடையிலே தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் இடம்பெற்று வந்துள்ளது இந்தநிலையில் சம்பவ தினம் கணவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது அவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி, வீட்டை பூட்டி விட்டு மனைவி வெளியே வந்துவிட்டார்இந்நிலையில் கணவர் அலறித் துடித்து கதறிய போதும் மனைவி கதவை திறக்கவில்லை. பின்னர் பிள்ளைகளின் கதறலுக்குப் பிறகே மனைவி கதவை திறந்துள்ளார். ஏற்கனவே யூடியூப்பில் பார்த்த வீடியோ ஒன்றை அடிப்படையாக கொண்டு இந்த செயலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சரோஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.