மருத்துவக் கல்விக்காக முயற்சி செய்த மாணவி ஒருவரின் மரணம் இன்று சமூகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சாங்கிலி மாவட்டம் நெல்கரஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சாதனா போஸ்லே, 12ஆம் வகுப்பு முடித்து நீட் தேர்வில் பங்கேற்றிருந்தார்.
தேர்வு முடிவு வெளியானபோது குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தார். அவர் பெற்ற குறைந்த மதிப்பெண்கள் காரணமாக மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் இருந்தது.
அவரது தந்தை தோண்டிராம் போஸ்லே, ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியராக பணியாற்றுகின்றார்.
இவர் – தனது மகளிடம் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதைக் கேள்வி கேட்டுள்ளார். அந்த நேரத்தில் அவரது மகள் கூறிய பதில்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியதாக கூறப்படுகிறது.
கோபத்தின் உச்சியில் சென்ற தந்தை, வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லில் பொறுத்தப்பட்டிருந்த கட்டையை உருவி மகளை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவரது தாயார் தடுத்து நிறுத்திய போதும், அவர் இரவு முழுக்க தனது மகளை அடித்து உதைத்ததாக தெரிகிறது
இதனால் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
இது தொடர்பாக மாணவியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில், தோண்டிராம் போஸ்லேவை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம், கல்விச் சிக்கல்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்புகள் பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் அழுத்தங்களை வெளிப்படுத்தியுள்ளது.
குறைந்த மதிப்பெண் பெற்றதால் - மகளைக் கொன்ற தந்தை மருத்துவக் கல்விக்காக முயற்சி செய்த மாணவி ஒருவரின் மரணம் இன்று சமூகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தின் சாங்கிலி மாவட்டம் நெல்கரஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சாதனா போஸ்லே, 12ஆம் வகுப்பு முடித்து நீட் தேர்வில் பங்கேற்றிருந்தார். தேர்வு முடிவு வெளியானபோது குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தார். அவர் பெற்ற குறைந்த மதிப்பெண்கள் காரணமாக மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் இருந்தது.அவரது தந்தை தோண்டிராம் போஸ்லே, ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியராக பணியாற்றுகின்றார். இவர் – தனது மகளிடம் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதைக் கேள்வி கேட்டுள்ளார். அந்த நேரத்தில் அவரது மகள் கூறிய பதில்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியதாக கூறப்படுகிறது.கோபத்தின் உச்சியில் சென்ற தந்தை, வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லில் பொறுத்தப்பட்டிருந்த கட்டையை உருவி மகளை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.அவரது தாயார் தடுத்து நிறுத்திய போதும், அவர் இரவு முழுக்க தனது மகளை அடித்து உதைத்ததாக தெரிகிறதுஇதனால் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்இது தொடர்பாக மாணவியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில், தோண்டிராம் போஸ்லேவை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம், கல்விச் சிக்கல்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்புகள் பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் அழுத்தங்களை வெளிப்படுத்தியுள்ளது.