• Oct 15 2024

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறுமா..? இன்று வெளிவரவுள்ள அறிவிப்பு

Chithra / Oct 14th 2024, 9:14 am
image

Advertisement

 

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

அதன்படி இன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

எனினும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் தேர்வு உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்,

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டும் இருந்தன.

அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதையடுத்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சை விசாரணைகள் முடியும் வரை இடைநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறுமா. இன்று வெளிவரவுள்ள அறிவிப்பு  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.அதன்படி இன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.எனினும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் தேர்வு உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்,புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டும் இருந்தன.அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.மேலும் இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதையடுத்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சை விசாரணைகள் முடியும் வரை இடைநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement