• May 18 2024

பெண்ணொருவரின் பணப்பையை திருடிய பெண் பொலிஸ் கைது

Chithra / May 5th 2024, 3:36 pm
image

Advertisement

கண்டியில் ஆடை விற்பனை நிலையமொன்றில் பெண்ணொருவரின் பணப்பையைத் திருடியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கண்டி  குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணப்பையின் உரிமையாளர் கடந்த மாதம் 9 ஆம் திகதி பணப்பையைக் காணவில்லை எனக் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, 

சம்பந்தப்பட்ட துணிக்கடையின் சிசிரிவி கெமரா அமைப்பைக் கண்காணித்ததில் பெண் ஒருவர் கைப்பையைத் திறந்து பணப்பையைத் திருடிச் சென்றது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​பொக்காவல பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


பெண்ணொருவரின் பணப்பையை திருடிய பெண் பொலிஸ் கைது கண்டியில் ஆடை விற்பனை நிலையமொன்றில் பெண்ணொருவரின் பணப்பையைத் திருடியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கண்டி  குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பணப்பையின் உரிமையாளர் கடந்த மாதம் 9 ஆம் திகதி பணப்பையைக் காணவில்லை எனக் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட துணிக்கடையின் சிசிரிவி கெமரா அமைப்பைக் கண்காணித்ததில் பெண் ஒருவர் கைப்பையைத் திறந்து பணப்பையைத் திருடிச் சென்றது அவதானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​பொக்காவல பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement