• Mar 26 2025

கிளிநொச்சியில் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தி - இளைஞன் கைது

Chithra / Mar 25th 2025, 9:06 am
image


 

கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியலறை பகுதியில் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தி மேற்கொண்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியல் அறையில்  நிலத்தில் தோண்டி, கோடா பரல் தாக்கப்பட்டு, தண்ணீர் குடத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு கேஸ் அடுப்பு மூலம் தீ மூட்டப்பட்டு இவ் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கசிப்பு உற்பத்தி முற்றுகையின் போது 380 லீட்டர் கோடாவும் 20 லீட்டர் கசிப்பும் உற்பத்திக்கான பொருட்களும் கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட 20 வயது இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கிளிநொச்சியில் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தி - இளைஞன் கைது  கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியலறை பகுதியில் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தி மேற்கொண்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குளியல் அறையில்  நிலத்தில் தோண்டி, கோடா பரல் தாக்கப்பட்டு, தண்ணீர் குடத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு கேஸ் அடுப்பு மூலம் தீ மூட்டப்பட்டு இவ் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கசிப்பு உற்பத்தி முற்றுகையின் போது 380 லீட்டர் கோடாவும் 20 லீட்டர் கசிப்பும் உற்பத்திக்கான பொருட்களும் கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட 20 வயது இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement