மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் (15வயது) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (28) மாலை சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கடலில் நீராடச் சென்றுள்ளனர்.
இந்நிலையிலேயே குறித்த சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை (29) மாலை 7.00 மணியளவில் சடலம் ஒன்று களுவன்கேணி கடலில் மிதப்பதை அவதானித்த மீனவர்கள் கரைக்கு எடுத்து வந்ததுடன், சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் சடலம் சிறுவனுடையது என அடையாளப்படுத்தப்பட்டது.
திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுடன் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு. தமிழர் பகுதியில் துயரம் மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் (15வயது) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.செவ்வாய்க்கிழமை (28) மாலை சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கடலில் நீராடச் சென்றுள்ளனர். இந்நிலையிலேயே குறித்த சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்று புதன்கிழமை (29) மாலை 7.00 மணியளவில் சடலம் ஒன்று களுவன்கேணி கடலில் மிதப்பதை அவதானித்த மீனவர்கள் கரைக்கு எடுத்து வந்ததுடன், சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.பின்னர் சடலம் சிறுவனுடையது என அடையாளப்படுத்தப்பட்டது.திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.