ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33வது தியாகிகள் தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந. சிவசக்தி ஆனந்தன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இன்று (19) காலை 9.30 மணியளவில் வவுனியா நகரில் அமைந்துள்ள பத்மநாபா திருவுருவ சிலைக்கு கட்சியின் பிரமுகர்களால் மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் பின்னர் தேக்கவத்தையில் உள்ள கட்சி காரியாலயத்தில் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தியும் அஞ்சலி நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.