• Oct 18 2024

காரைநகரில் கறுப்பு யூலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்பு..!

Sharmi / Jul 23rd 2024, 9:18 pm
image

Advertisement

கறுப்பு யூலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் காரைநகரில் உணர்வுபூர்வமாக இன்று(23) மாலை முன்னெடுக்கப்பட்டது.

காரைநகர் வலந்தலை மடத்துகரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது 1983 ஆம் ஆண்டு யூலை மாதமளவில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி பொது சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது .

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஆ.விஜயராஜா ,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான தவமணி , ஜெயந்தன்,நாகராஜா , இலங்கை தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையினர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



காரைநகரில் கறுப்பு யூலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்பு. கறுப்பு யூலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் காரைநகரில் உணர்வுபூர்வமாக இன்று(23) மாலை முன்னெடுக்கப்பட்டது.காரைநகர் வலந்தலை மடத்துகரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.இதன் பொழுது 1983 ஆம் ஆண்டு யூலை மாதமளவில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி பொது சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது .காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஆ.விஜயராஜா ,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான தவமணி , ஜெயந்தன்,நாகராஜா , இலங்கை தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையினர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement