• May 18 2024

உயர்தரப்பரீட்சை முடிந்து 60 நாட்கள் கடந்துவிட்டது; விடைத்தாள்கள் தாமதம்! ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை samugammedia

Chithra / Apr 16th 2023, 4:06 pm
image

Advertisement

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காணவேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆரம்பித்திருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

இதனால் பல்கலைக்கழகங்களில் கல்வி செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் நாளைய தினம் மீண்டும் பல்கலைகழகங்களில் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமது கோரிக்கைகள் தொடர்பாக திருப்திகரமான தீர்வு கிடைக்காத நிலையில் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யமுடியாதென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உயர்தர பரீட்சை இடம்பெற்று 60 நாட்களை கடந்துள்ள போதும் விடைத்தாள்கள் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜோசப் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய போது பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவ்வாறு தீர்வு காணப்படாவிட்டால், பாடசாலை மாணவர்கள் மேலும் பல சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

உயர்தரப்பரீட்சை முடிந்து 60 நாட்கள் கடந்துவிட்டது; விடைத்தாள்கள் தாமதம் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை samugammedia பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காணவேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆரம்பித்திருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.இதனால் பல்கலைக்கழகங்களில் கல்வி செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.எனினும் நாளைய தினம் மீண்டும் பல்கலைகழகங்களில் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமது கோரிக்கைகள் தொடர்பாக திருப்திகரமான தீர்வு கிடைக்காத நிலையில் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யமுடியாதென அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் உயர்தர பரீட்சை இடம்பெற்று 60 நாட்களை கடந்துள்ள போதும் விடைத்தாள்கள் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக ஜோசப் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய போது பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் அவ்வாறு தீர்வு காணப்படாவிட்டால், பாடசாலை மாணவர்கள் மேலும் பல சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement