வீட்டின் இரும்புப் படலை, சிறுவன் மீது வீழ்ந்ததில் அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.
கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த மூன்று வயதுடைய ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவன், வீட்டு படலையில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்பு படலை) சிறுவன் மீது வீழ்ந்து சிறுவன் உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுவனின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவனின் உயிரிழப்பு கேப்பாபிலவு கிராமத்தில் பெரும்சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனுக்கு எமனான இரும்பு படலை. முல்லைத்தீவில் சோகம் samugammedia வீட்டின் இரும்புப் படலை, சிறுவன் மீது வீழ்ந்ததில் அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த மூன்று வயதுடைய ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவன், வீட்டு படலையில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்பு படலை) சிறுவன் மீது வீழ்ந்து சிறுவன் உயிரிழந்தார்.உயிரிழந்த சிறுவனின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த சிறுவனின் உயிரிழப்பு கேப்பாபிலவு கிராமத்தில் பெரும்சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.