• May 28 2026

வேலை செய்யும் பெற்றோரை பார்வையிட செல்ல முயன்ற சிறுவன் பாதுகாப்பாக மீட்பு!

shanu / May 27th 2026, 7:42 pm
image

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்   மாணவன் ஒருவன், ஹட்டன் பேரூந்து நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேரூந்து நிலைய நேரக் காப்பாளரின் சாதுரியமான செயலினாலேயே இந்தச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.


 கொழும்புப் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக, தான் தனியாகப் பேரூந்து மூலம் கொழும்புக்குச் செல்லப் போவதாக அந்தச் சிறுவன் நேரக் காப்பாளரிடம் தெரிவித்துள்ளார். 


மேலும், கொழும்பு செல்வதற்காகத் தனது பெரியம்மா (தாயின் அக்கா) தனக்குக் காசு கொடுத்ததாகவும் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.


7 வயதுச் சிறுவன் ஒருவன் தனியாகக் கொழும்பு செல்ல முயன்றதைக் கண்டு சந்தேகமடைந்த நேரக் காப்பாளர், சிறுவனைப் பேரூந்தில் ஏறுவதற்கு அனுமதிக்காது தடுத்து வைத்துள்ளார்.


பின்னர் இது குறித்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகளிடம் அச்சிறுவன் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.

வேலை செய்யும் பெற்றோரை பார்வையிட செல்ல முயன்ற சிறுவன் பாதுகாப்பாக மீட்பு நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்   மாணவன் ஒருவன், ஹட்டன் பேரூந்து நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேரூந்து நிலைய நேரக் காப்பாளரின் சாதுரியமான செயலினாலேயே இந்தச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புப் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக, தான் தனியாகப் பேரூந்து மூலம் கொழும்புக்குச் செல்லப் போவதாக அந்தச் சிறுவன் நேரக் காப்பாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும், கொழும்பு செல்வதற்காகத் தனது பெரியம்மா (தாயின் அக்கா) தனக்குக் காசு கொடுத்ததாகவும் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.7 வயதுச் சிறுவன் ஒருவன் தனியாகக் கொழும்பு செல்ல முயன்றதைக் கண்டு சந்தேகமடைந்த நேரக் காப்பாளர், சிறுவனைப் பேரூந்தில் ஏறுவதற்கு அனுமதிக்காது தடுத்து வைத்துள்ளார்.பின்னர் இது குறித்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகளிடம் அச்சிறுவன் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement