• Sep 08 2024

இசை நிகழ்வில் வெடித்த மோதல்...! ஒருவர் உயிரிழப்பு- பலர் காயம்..!

Sharmi / Jul 13th 2024, 1:24 pm
image

Advertisement

வீரகட்டிய மொராய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் வீரகட்டிய மொரய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மோதலில் மேலும் 5 பேர்  காயமடைந்துள்ளனர்.

அதேவேளை, காயமடைந்த நபர்கள்,  தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இசை நிகழ்வில் வெடித்த மோதல். ஒருவர் உயிரிழப்பு- பலர் காயம். வீரகட்டிய மொராய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர் வீரகட்டிய மொரய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த மோதலில் மேலும் 5 பேர்  காயமடைந்துள்ளனர்.அதேவேளை, காயமடைந்த நபர்கள்,  தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement