ஆடைகள், காலணிகளை வீசாமல் பழுதுபார்த்துத் தருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க பிரான்ஸ் நாடு திட்டமிட்டுள்ளது.
பிரான்சில் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
தற்போது பிரான்சில் ஆண்டுதோறும் 700,000 டன் ஆடைகள் வீசப்படுகின்றன.
காலணியின் குதிங்கால் பகுதியைப் பழுதுபார்க்க வாடிக்கையாளர்களுக்கு 7 யூரோ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடைகளைச் சரிசெய்து தருவோர் 10இலிருந்து 25 யூரோ வரை பெறலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.