இந்திய அரசாங்கத்தின் உதவியுடன்
யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாசார மண்டபத்தை கையளிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை யாழில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் விசேட இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த
இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்கு இசைக்கலைஞராக வருகை தந்திருந்த
தென்இந்திய பிரபல பல்திறன் கலைஞர் மோகன் வைத்தியா இன்று
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.