• May 18 2024

தரமற்ற ஔடதம் கொண்டு வந்த நபர் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் - காவிந்த ஜயவர்தன தெரிவிப்பு..!samugammedia

Tharun / Jan 13th 2024, 8:10 pm
image

Advertisement

மக்களை ஏமாற்றி Human Immunoglobulin என்ற தரமற்ற ஔடதம் கொண்டு வந்த  நபர் குறித்து நீதி விசாரணை மூலம் கொண்டு வர வேண்டும் என்றும், மக்களின் பணத்தை சுரண்டி வைத்துள்ளவர்கள் குறித்தும் நாங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அதாவது நாங்கள் குற்ற புலனாய்வு துறையிற்கும் சென்று எங்களிடம் உள்ள சேகரித்த தகவல்களை வழங்கினோம்.அதாவது மக்களை ஏமாற்றி, நாட்டை ஏமாற்றி விற்ற Human Immunoglobulin என்ற தரமற்ற ஔடதம் கொண்டு வந்த நபர் குறித்து நீதி விசாரணை மூலம் கொண்டு வர வேண்டும் என்றும், மக்களின் பணத்தை சுரண்டி வைத்துள்ளவர்கள் குறித்தும் நாங்கள் முறைப்பாடு செய்தோம்.

இக்குற்ற செயல்களை செய்ய கெஹலிய ரம்புக்வெல அவர்கள் இன்னும் அரசாங்கத்திற்கு  உரித்தான வாகனம், வீடு என்பவற்றை பயன்படுத்துகிறார். அரசாங்க பணம் பயன்படுத்த முடியாது. ஆனால் இன்னும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இன்றும் சுக போக வாழ்க்கைகளை அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கு மக்கள் வறுமையில் வாடுகின்றனர் மக்களின் பணத்தில் சுக போகங்களை அனுபவித்து வருகின்றனர். ஒரு நியாயமான முறையில் மக்களுக்கு சேவையை செய்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தரமற்ற ஔடதங்களை கொண்டு வந்து  மக்களை கொள்கிறார்கள். 

நாங்கள் குற்ற புலனாய்வு துறையிற்கு சென்று, பின்னர் பாராளுமன்றத்திற்கு சென்ற போது சிவில் சமூகத்தினர் எங்களிடம்,  தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சரும், முன்னாள் சுகாதார துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல குறித்து எங்களிடம் எழுத்து மூலம் வாங்கி கொண்டனர். 

நாங்கள்  மீண்டும் பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதம் செய்வோம். சாதாரண மக்கள் குறித்து நாங்கள் பேசுவோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

தரமற்ற ஔடதம் கொண்டு வந்த நபர் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் - காவிந்த ஜயவர்தன தெரிவிப்பு.samugammedia மக்களை ஏமாற்றி Human Immunoglobulin என்ற தரமற்ற ஔடதம் கொண்டு வந்த  நபர் குறித்து நீதி விசாரணை மூலம் கொண்டு வர வேண்டும் என்றும், மக்களின் பணத்தை சுரண்டி வைத்துள்ளவர்கள் குறித்தும் நாங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதாவது நாங்கள் குற்ற புலனாய்வு துறையிற்கும் சென்று எங்களிடம் உள்ள சேகரித்த தகவல்களை வழங்கினோம்.அதாவது மக்களை ஏமாற்றி, நாட்டை ஏமாற்றி விற்ற Human Immunoglobulin என்ற தரமற்ற ஔடதம் கொண்டு வந்த நபர் குறித்து நீதி விசாரணை மூலம் கொண்டு வர வேண்டும் என்றும், மக்களின் பணத்தை சுரண்டி வைத்துள்ளவர்கள் குறித்தும் நாங்கள் முறைப்பாடு செய்தோம்.இக்குற்ற செயல்களை செய்ய கெஹலிய ரம்புக்வெல அவர்கள் இன்னும் அரசாங்கத்திற்கு  உரித்தான வாகனம், வீடு என்பவற்றை பயன்படுத்துகிறார். அரசாங்க பணம் பயன்படுத்த முடியாது. ஆனால் இன்னும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.இன்றும் சுக போக வாழ்க்கைகளை அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கு மக்கள் வறுமையில் வாடுகின்றனர் மக்களின் பணத்தில் சுக போகங்களை அனுபவித்து வருகின்றனர். ஒரு நியாயமான முறையில் மக்களுக்கு சேவையை செய்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தரமற்ற ஔடதங்களை கொண்டு வந்து  மக்களை கொள்கிறார்கள். நாங்கள் குற்ற புலனாய்வு துறையிற்கு சென்று, பின்னர் பாராளுமன்றத்திற்கு சென்ற போது சிவில் சமூகத்தினர் எங்களிடம்,  தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சரும், முன்னாள் சுகாதார துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல குறித்து எங்களிடம் எழுத்து மூலம் வாங்கி கொண்டனர். நாங்கள்  மீண்டும் பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதம் செய்வோம். சாதாரண மக்கள் குறித்து நாங்கள் பேசுவோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement