• May 17 2024

வேலைதேடி வெளிநாடு சென்ற தாய்...! பிள்ளைகளை சீரழித்த காமுக தகப்பன்...!திருகோணமலையில் கொடூரம்...!

Sharmi / Apr 11th 2024, 3:22 pm
image

Advertisement

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், தான்  பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய  நபரே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபருடைய மனைவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் தமது 2 பிள்ளைகளையும் குறித்த நபர் தனது கண்காணிப்பில் வைத்திருந்துள்ளார். 

இந்த நிலையில்,  மூன்று வயது சிறுமி சிறுநீர் கழிக்கும் போது கதறியுள்ளார். அப்போது  குறித்த நபரின் உறவினர்கள் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.

சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள்   சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் நிலையத்திற்கு  தெரியப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை  5 வயது சிறுவனும்  துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதனடிப்படையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,  சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் தகப்பன் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்துள்ளான்.

அத்துடன்  மூன்று வயது சிறுமியிடமும் பொலிஸார் வாக்குமூலத்தினை பெற்றுள்ளனர். 

இரு பிள்ளைகளினதும் வாக்குமூலத்தின்  அடிப்படையில்  குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தந்தையால்  துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரு பிள்ளைகளும்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

வேலைதேடி வெளிநாடு சென்ற தாய். பிள்ளைகளை சீரழித்த காமுக தகப்பன்.திருகோணமலையில் கொடூரம். திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், தான்  பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய  நபரே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருடைய மனைவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் தமது 2 பிள்ளைகளையும் குறித்த நபர் தனது கண்காணிப்பில் வைத்திருந்துள்ளார். இந்த நிலையில்,  மூன்று வயது சிறுமி சிறுநீர் கழிக்கும் போது கதறியுள்ளார். அப்போது  குறித்த நபரின் உறவினர்கள் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர். சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள்   சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் நிலையத்திற்கு  தெரியப்படுத்தியுள்ளனர்.இதேவேளை  5 வயது சிறுவனும்  துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனடிப்படையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,  சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் தகப்பன் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்துள்ளான். அத்துடன்  மூன்று வயது சிறுமியிடமும் பொலிஸார் வாக்குமூலத்தினை பெற்றுள்ளனர். இரு பிள்ளைகளினதும் வாக்குமூலத்தின்  அடிப்படையில்  குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த தந்தையால்  துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரு பிள்ளைகளும்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement