ருவன்வெல்ல, ஹும்பஸ்வலான பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து தன்னோருவ நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதிபலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
விபத்தைத் தொடர்ந்து அவர் கவலைக்கிடமான நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஹும்பஸ்வலான, ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மிதி பலகையில் அமர்ந்திருந்த போது தவறி விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சடலம் கரவனெல்ல வைத்தியசாலையின் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்திலிருந்து தவறி விழுந்த நபரொருவர் உயிரிழப்பு ருவன்வெல்ல, ஹும்பஸ்வலான பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து தன்னோருவ நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதிபலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.விபத்தைத் தொடர்ந்து அவர் கவலைக்கிடமான நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹும்பஸ்வலான, ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மிதி பலகையில் அமர்ந்திருந்த போது தவறி விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது. சடலம் கரவனெல்ல வைத்தியசாலையின் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.