• Mar 12 2025

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்யத் திட்டமா? வெளியான தகவல்

Chithra / Mar 11th 2025, 9:01 am
image

 

நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியும், தவறான உற்பத்தி திகதிகளுடன் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எனினும், வாகனங்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். 

தற்போது பழைய வாகனங்கள் எவையும் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும்,

2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கப்பலில் ஏற்றும் திகதியிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னதாக உற்பத்தி செய்யப்பட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சட்டரீதியாக அனுமதி உள்ளது. 

சுங்கத்தினால் இந்த வாகனங்கள் முறையாக பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.  

எனவே, பழைய வாகனங்கள் எவையும் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் எந்தவொரு வாகனமும் மீள ஏற்றுமதி செய்யப்படமாட்டாது எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்யத் திட்டமா வெளியான தகவல்  நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியும், தவறான உற்பத்தி திகதிகளுடன் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், வாகனங்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். தற்போது பழைய வாகனங்கள் எவையும் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும்,2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கப்பலில் ஏற்றும் திகதியிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னதாக உற்பத்தி செய்யப்பட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சட்டரீதியாக அனுமதி உள்ளது. சுங்கத்தினால் இந்த வாகனங்கள் முறையாக பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.  எனவே, பழைய வாகனங்கள் எவையும் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் எந்தவொரு வாகனமும் மீள ஏற்றுமதி செய்யப்படமாட்டாது எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement