வவுனியா நகரப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் வயோதிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஏ9 வீதியில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக கோவில்குளம் நோக்கி சென்ற பாரவூர்தி நகர பள்ளிவாசல் முன்னால் பயணித்துக் கொண்டிருந்த போது நகரப் பகுதியில் இருந்து வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் நெடுக்குளம் பகுதியைச் சேர்ந்த கும்புகேகெதர முத்துபண்டா (வயது 71) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் துவிச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய பாரவூர்தி. வயோதிபர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia வவுனியா நகரப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் வயோதிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா ஏ9 வீதியில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக கோவில்குளம் நோக்கி சென்ற பாரவூர்தி நகர பள்ளிவாசல் முன்னால் பயணித்துக் கொண்டிருந்த போது நகரப் பகுதியில் இருந்து வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் நெடுக்குளம் பகுதியைச் சேர்ந்த கும்புகேகெதர முத்துபண்டா (வயது 71) என அடையாளம் காணப்பட்டுள்ளது.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.