பெலியத்தவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சாகரிகா புகையிரதத்துடன் கழிவுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கொடகம கஹவ புகையிரத கடவையில் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அதேவேளை குறித்த விபத்தில் மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கஹ்வா ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.