• Sep 20 2024

கிளிநொச்சியில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுக்கும் 3ம் கட்ட பணிகள் தொடர்பில் செயலமர்வு..!

Sharmi / Aug 14th 2024, 11:38 am
image

Advertisement

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுக்கும் 3ம் கட்ட பணிகள் தொடர்பான செயலமர்வு இன்றையதினம்(14) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் 15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

அதன் மூன்றாம் கட்ட பணிகள் நடைபெறவுள்ள நிலையில் இன்று நிர்வாக உயர்மட்ட உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இன்றையதினம்(14) காலை 09.30 மணிக்கு தனியார் விருந்தக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில், புள்ளிவிபரவியல் மற்றும் தொகைமதிப்பு திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் குமாரி பிரேமலதா, மாவட்டச் செயலாளர் எஸ்.முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.


கிளிநொச்சியில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுக்கும் 3ம் கட்ட பணிகள் தொடர்பில் செயலமர்வு. குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுக்கும் 3ம் கட்ட பணிகள் தொடர்பான செயலமர்வு இன்றையதினம்(14) கிளிநொச்சியில் இடம்பெற்றது.நாடளாவிய ரீதியில் 15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் மூன்றாம் கட்ட பணிகள் நடைபெறவுள்ள நிலையில் இன்று நிர்வாக உயர்மட்ட உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடப்பட்டது.இன்றையதினம்(14) காலை 09.30 மணிக்கு தனியார் விருந்தக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில், புள்ளிவிபரவியல் மற்றும் தொகைமதிப்பு திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் குமாரி பிரேமலதா, மாவட்டச் செயலாளர் எஸ்.முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement