• Oct 19 2024

மகிந்தவை தராசில் ஏற்றுங்கள் - அப்போது மக்களுக்கு மகிந்தவின் அருமை புரியும் - சாகர கூச்சல் !samugammedia

Tamil nila / Apr 9th 2023, 4:20 pm
image

Advertisement

எதிர்வரும் காலங்களில் மீண்டும் மக்களுக்கு தேவையான கட்சியாக தமது கட்சி மாற்றமடையும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ தொகுதிக்கான கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இலங்கையின் அனைத்துத் தலைவர்களும் செய்த பணியை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச செய்த வேலையை இன்னொரு பக்கம் வைத்து நோக்கினால் மகிந்த செய்த பணிகளே அதிகம் என்றும் சாகர காரியவசம் குறிப்பிடுகின்றார்.

மக்கள் நினைப்பது போன்று வீடுகளை கொளுத்தி, அடித்து, பயமுறுத்தும் கட்சி, பொதுஜன பெரமுன அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும் இந்த நாட்டை கட்டியெழுப்ப நினைத்தோம் 

எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் கடன் செலுத்தும் அளவிற்கு கடன்களை பெற்று இந்த நாட்டை கட்டியெழுப்ப நினைக்கவில்லைமாறாக என் கஸ்டம் வந்தாலும் கடன்களை மேலும் பெறாமல் கடன்களை செலுத்தவே விரும்பினோம்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்கள் இன்று எப்படி போராடுகிறார்கள் என்பதை நாம் பார்க்கின்றோம்.

அத்தகைய எதிர்காலத்துக்காக இந்த நாட்டு மக்கள் திரண்டனர்.ஒரு கட்சி என்ற ரீதியில், இந்த நாட்டு மக்களுக்கு மிக விரைவில் எதிர்காலத்தில் நாங்கள் மீண்டும் தேவைப்படுவோம் என்றும் நாட்டு மக்கள் வீதிக்கு வந்து, தேசிய அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தேசிய பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும் என்று கூக்குரலிடுவார்கள் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்தவை தராசில் ஏற்றுங்கள் - அப்போது மக்களுக்கு மகிந்தவின் அருமை புரியும் - சாகர கூச்சல் samugammedia எதிர்வரும் காலங்களில் மீண்டும் மக்களுக்கு தேவையான கட்சியாக தமது கட்சி மாற்றமடையும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.கொலன்னாவ தொகுதிக்கான கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இலங்கையின் அனைத்துத் தலைவர்களும் செய்த பணியை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச செய்த வேலையை இன்னொரு பக்கம் வைத்து நோக்கினால் மகிந்த செய்த பணிகளே அதிகம் என்றும் சாகர காரியவசம் குறிப்பிடுகின்றார்.மக்கள் நினைப்பது போன்று வீடுகளை கொளுத்தி, அடித்து, பயமுறுத்தும் கட்சி, பொதுஜன பெரமுன அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும் இந்த நாட்டை கட்டியெழுப்ப நினைத்தோம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் கடன் செலுத்தும் அளவிற்கு கடன்களை பெற்று இந்த நாட்டை கட்டியெழுப்ப நினைக்கவில்லைமாறாக என் கஸ்டம் வந்தாலும் கடன்களை மேலும் பெறாமல் கடன்களை செலுத்தவே விரும்பினோம்.போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்கள் இன்று எப்படி போராடுகிறார்கள் என்பதை நாம் பார்க்கின்றோம்.அத்தகைய எதிர்காலத்துக்காக இந்த நாட்டு மக்கள் திரண்டனர்.ஒரு கட்சி என்ற ரீதியில், இந்த நாட்டு மக்களுக்கு மிக விரைவில் எதிர்காலத்தில் நாங்கள் மீண்டும் தேவைப்படுவோம் என்றும் நாட்டு மக்கள் வீதிக்கு வந்து, தேசிய அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தேசிய பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும் என்று கூக்குரலிடுவார்கள் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement