இந்தியா ஆமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கிப்புறப்பட்டு 30 விநாடிகளில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தின்தரக்குறைபாடுகள் தொடர்பில் அந்த விமானத்தில் கடந்த காலங்களில் பயணித்த பயணிகள் பாரியகுற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள்.
குறித்த விமானத்தில் தாம் பெற்ற அனுபவங்களைகாணொளிகளாக வெளியிட்டு தமது ஆதங்கங்களை கொட்டி வருகின்றனர்
இந்த விமானம் ட்ரீம்லைனர் வகையை சார்ந்தது. அமெரிக்கவிமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்த விமான வகையை 14 வருடங்களுக்கு முன்அறிமுகப்படுத்தியது. போயிங் 787-8 விமானம் ஏர் இந்தியாவிடம் 2014-ல்கிடைத்தது. அதில் மொத்தமாக 256 இருக்கைகள் உள்ளதுடன் அதன் நீளம் 57 மீட்டர்,அகலம் (இரண்டு இறக்கைகளின் நுனிகளுக்கு இடையிலான தூரம்) 60 மீட்டர் மற்றும் அதன் உயரம்17 மீட்டர் ஆகும்.
விமானத் தயாரிப்பில் முறையான தர நிலைகளைபின்பற்றுவதில்லை என போயிங் நிறுவனத்தில் 32 வருடங்கள் பணியாற்றிய அதன் முன்னாள்ஊழியரான ஜான் பர்னெட் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். போயிங்நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் அவர் பல ஆதாரங்களை கொடுத்தார்.
அவர் அந்தநிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு மேலாளராக இருந்தார்.விமானத்தின் ஆக்சிஜன் அமைப்பில் கடுமையானகுறைபாடுகள் இருப்பதாகவும், நான்கில் ஒரு ஆக்சிஜன் முகக்கசவம் அவசர காலத்தில் வேலைசெய்யாத நிலையில் இருக்கலாம் என்றும் பர்னெட் எச்சரித்திருந்தார்.
787 ரக விமானத்தில் நிறுவப்பட்ட அவசர கால ஆக்சிஜன் அமைப்பு பரிசோதிக்கப்பட்டபோது 25 விழுக்காடுதோல்வியடைந்ததாக அவர் கூறினார். தெற்கு கரோலினாவில் தயாரிப்பு பணிகள்தொடங்கிய பிறகு விமானங்களை வேகமாக தயாரிக்கும்படி தொழிலாளர்கள் மீது அழுத்தம்அதிகரிக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக அவர்கள் தயாரிப்பு முறையிலும், பாதுகாப்புஅம்சங்களிலும் சமரசம் செய்துகொள்ள நேர்ந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
பர்னெட்முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் ஆய்வு செய்தபோதுஅவற்றில் சில உண்மையானவை என்று உறுதி செய்யப்பட்டன,
ஆனால் 12 ஆண்டுகள் பழமையான இந்த விமானத்தை தயாரித்த நிறுவனம் கடந்த ஆறு வாரங்களுக்கு முன்புதான் , டிரீம்லைனர் என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல்கல்லை எட்டியதாகத் தெரிவித்து கொண்டாடியிருந்தது. இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற விபத்து குறித்த நிறுவனத்துக்கு பேரியாக அமைந்துள்ளது.
மேலும் இந்த விபத்தின் பின்னர் அண்மைய காலங்களில் ஏர்இந்தியாவில் பயணம் செய்த பயணிகள் பலகாணொளிகளை பகிர்ந்துள்ளர்.இருக்கைகள் உடைவடைந்து கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதுடன்பாகங்கள் பல பழுதடைந்த நிலையிலும் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
இந்த விபத்து தடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்கவனயீனத்தால் அநியாயமாக பல உயிர்களை இழந்துவிட்டோம் எனவும் தமது ஆதங்கங்களைதெரிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் 230 பயணிகள் மற்றும் 12பணியாளர்களுடன் புறப்பட்ட குறித்த விமானத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர்உயிர்பிழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனவுகளை சிதைத்த ஏர் இந்தியா போஜிங் 787-8. - விமானத்தினுள் எடுக்கப்பட்ட அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தரும் நேரடிக் காட்சிகள். இந்தியா ஆமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கிப்புறப்பட்டு 30 விநாடிகளில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தின்தரக்குறைபாடுகள் தொடர்பில் அந்த விமானத்தில் கடந்த காலங்களில் பயணித்த பயணிகள் பாரியகுற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள். குறித்த விமானத்தில் தாம் பெற்ற அனுபவங்களைகாணொளிகளாக வெளியிட்டு தமது ஆதங்கங்களை கொட்டி வருகின்றனர் இந்த விமானம் ட்ரீம்லைனர் வகையை சார்ந்தது. அமெரிக்கவிமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்த விமான வகையை 14 வருடங்களுக்கு முன்அறிமுகப்படுத்தியது. போயிங் 787-8 விமானம் ஏர் இந்தியாவிடம் 2014-ல்கிடைத்தது. அதில் மொத்தமாக 256 இருக்கைகள் உள்ளதுடன் அதன் நீளம் 57 மீட்டர்,அகலம் (இரண்டு இறக்கைகளின் நுனிகளுக்கு இடையிலான தூரம்) 60 மீட்டர் மற்றும் அதன் உயரம்17 மீட்டர் ஆகும். விமானத் தயாரிப்பில் முறையான தர நிலைகளைபின்பற்றுவதில்லை என போயிங் நிறுவனத்தில் 32 வருடங்கள் பணியாற்றிய அதன் முன்னாள்ஊழியரான ஜான் பர்னெட் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். போயிங்நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் அவர் பல ஆதாரங்களை கொடுத்தார். அவர் அந்தநிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு மேலாளராக இருந்தார்.விமானத்தின் ஆக்சிஜன் அமைப்பில் கடுமையானகுறைபாடுகள் இருப்பதாகவும், நான்கில் ஒரு ஆக்சிஜன் முகக்கசவம் அவசர காலத்தில் வேலைசெய்யாத நிலையில் இருக்கலாம் என்றும் பர்னெட் எச்சரித்திருந்தார். 787 ரக விமானத்தில் நிறுவப்பட்ட அவசர கால ஆக்சிஜன் அமைப்பு பரிசோதிக்கப்பட்டபோது 25 விழுக்காடுதோல்வியடைந்ததாக அவர் கூறினார். தெற்கு கரோலினாவில் தயாரிப்பு பணிகள்தொடங்கிய பிறகு விமானங்களை வேகமாக தயாரிக்கும்படி தொழிலாளர்கள் மீது அழுத்தம்அதிகரிக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக அவர்கள் தயாரிப்பு முறையிலும், பாதுகாப்புஅம்சங்களிலும் சமரசம் செய்துகொள்ள நேர்ந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். பர்னெட்முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் ஆய்வு செய்தபோதுஅவற்றில் சில உண்மையானவை என்று உறுதி செய்யப்பட்டன,ஆனால் 12 ஆண்டுகள் பழமையான இந்த விமானத்தை தயாரித்த நிறுவனம் கடந்த ஆறு வாரங்களுக்கு முன்புதான் , டிரீம்லைனர் என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல்கல்லை எட்டியதாகத் தெரிவித்து கொண்டாடியிருந்தது. இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற விபத்து குறித்த நிறுவனத்துக்கு பேரியாக அமைந்துள்ளது. மேலும் இந்த விபத்தின் பின்னர் அண்மைய காலங்களில் ஏர்இந்தியாவில் பயணம் செய்த பயணிகள் பலகாணொளிகளை பகிர்ந்துள்ளர்.இருக்கைகள் உடைவடைந்து கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதுடன்பாகங்கள் பல பழுதடைந்த நிலையிலும் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது. இந்த விபத்து தடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்கவனயீனத்தால் அநியாயமாக பல உயிர்களை இழந்துவிட்டோம் எனவும் தமது ஆதங்கங்களைதெரிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் 230 பயணிகள் மற்றும் 12பணியாளர்களுடன் புறப்பட்ட குறித்த விமானத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர்உயிர்பிழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.