உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஆரம்பமாகி ஓராண்டாகியுள்ள நிலையில், கீய்வில் தனது தூதரகத்தை மீண்டும் திறக்கவுள்ளதாக அல்ஜீரியா தெரிவித்துள்ளது.
அல்ஜீரிய அரசின் நலன்கள், தேசிய சமூகத்தின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக அதன் செயற்பாடுகளை அல்ஜீரிய தூதரகம் இடைநிறுத்தியிருந்தது.
இந்நிலையில், தூதரகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீய்வில் தூதரக செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கும் அல்ஜீரிய நிறுவனம் SamugamMedia உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஆரம்பமாகி ஓராண்டாகியுள்ள நிலையில், கீய்வில் தனது தூதரகத்தை மீண்டும் திறக்கவுள்ளதாக அல்ஜீரியா தெரிவித்துள்ளது. அல்ஜீரிய அரசின் நலன்கள், தேசிய சமூகத்தின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக அதன் செயற்பாடுகளை அல்ஜீரிய தூதரகம் இடைநிறுத்தியிருந்தது. இந்நிலையில், தூதரகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.