சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்த ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் செய்து கொண்டனர். அதேபோல, நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டு இரட்டைக்குழந்தைக்கு பெற்றோராகிவிட்டனர்.
இதனை அடுத்து நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, நடிகை கியாரா அத்வானி ஆகியோர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையத்தில் செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் பேலஸ் ஹோட்டலை இவர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறுப்படுகிறது.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்வான மெஹந்தி, ஹல்டி மற்றும் சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும், திருமணத்திற்கான ஆடைகள் குறித்து விவாதிப்பதற்காக இருவரும் கடந்த வாரம் ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் சித்தார்த் மல்ஹோத்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சித்தார்த், தனது திருமணம் பற்றி பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது வதந்தி என்றார். இதுவரை யாரும் எனது திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும், எனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மக்கள் ஊகிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும், அதற்கு பதிலாக நான் நடிக்கும் படங்களை விரும்பி பார்த்தால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனக்கும் அந்த நடிகைக்கும் திருமணமா- விளக்கம் கொடுத்த பிரபல இளம் நடிகர் சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்த ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் செய்து கொண்டனர். அதேபோல, நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டு இரட்டைக்குழந்தைக்கு பெற்றோராகிவிட்டனர்.இதனை அடுத்து நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, நடிகை கியாரா அத்வானி ஆகியோர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையத்தில் செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் பேலஸ் ஹோட்டலை இவர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறுப்படுகிறது.திருமணத்திற்கு முந்தைய நிகழ்வான மெஹந்தி, ஹல்டி மற்றும் சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும், திருமணத்திற்கான ஆடைகள் குறித்து விவாதிப்பதற்காக இருவரும் கடந்த வாரம் ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் சித்தார்த் மல்ஹோத்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சித்தார்த், தனது திருமணம் பற்றி பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது வதந்தி என்றார். இதுவரை யாரும் எனது திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும், எனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மக்கள் ஊகிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும், அதற்கு பதிலாக நான் நடிக்கும் படங்களை விரும்பி பார்த்தால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.