தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இறுதியாக இடம்பெற்ற (2023) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி பரீட்சை பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
இம்முறை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள் தோற்றியிருந்ததுடன் நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.