யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று நேற்று (29) கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்த ஆட்டினை வளர்த்து வந்த குறித்த பெண், கணவனை இழந்தவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில், தனது வாழ்வாதாரத்துக்காக ஆடுகளை வளர்த்து வருகின்றார்.
இந்நிலையில்,மேய்ச்சலுக்காக சென்ற குறித்த பெண்ணிற்கு சொந்தமான ஆடு ஒன்றினை சில நபர்கள் திருடி இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்தபோது கட்டைக்காட்டில் வைத்து இறைச்சி மீட்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் ஆட்டை இறைச்சிக்காக வெட்டிய இடத்தை கண்டு பிடித்ததோடு சந்தேக நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் அறிந்து குறித்த இடத்திற்கு சென்ற வெற்றிலைக்கேணி பெண் கிராம அலுவலருடன், மதுபோதையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தகாத வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டதாக வெற்றிலைக்கேணி பெண் கிராம அலுவலர் குற்றம் சாட்டியுள்ளார்.
கிராம அலுவலருடன் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் குறித்து முள்ளியான் பொலிஸ் குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டு மருதங்கேணி பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் இறைச்சிக்காக ஆட்டை வெட்டிய நபர்கள். சம்பவ இடத்திற்கு சென்ற பெண் கிராம உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட நிலை. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று நேற்று (29) கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.அந்த ஆட்டினை வளர்த்து வந்த குறித்த பெண், கணவனை இழந்தவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில், தனது வாழ்வாதாரத்துக்காக ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில்,மேய்ச்சலுக்காக சென்ற குறித்த பெண்ணிற்கு சொந்தமான ஆடு ஒன்றினை சில நபர்கள் திருடி இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்தபோது கட்டைக்காட்டில் வைத்து இறைச்சி மீட்கப்பட்டது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் ஆட்டை இறைச்சிக்காக வெட்டிய இடத்தை கண்டு பிடித்ததோடு சந்தேக நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் அறிந்து குறித்த இடத்திற்கு சென்ற வெற்றிலைக்கேணி பெண் கிராம அலுவலருடன், மதுபோதையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தகாத வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டதாக வெற்றிலைக்கேணி பெண் கிராம அலுவலர் குற்றம் சாட்டியுள்ளார்.கிராம அலுவலருடன் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் குறித்து முள்ளியான் பொலிஸ் குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டு மருதங்கேணி பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.