• Nov 01 2025

நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மோதிய மற்றுமொரு பேருந்து; நால்வர் உயிரிழப்பு - 28 பேர் வைத்தியசாலையில்!

shanuja / Oct 31st 2025, 1:57 pm
image

நிறுத்தப்பட்ட பேருந்து மீது பின்னால் சென்ற மற்றுமொரு பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   


கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றை மற்றுமொரு தனியார் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. 


கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து  பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சிகிச்சை பலனின்றி மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும்  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


பின்னால் வந்த பேருந்து அதிவேகமாக பயணித்ததால்  இந்த விபத்து இடம்பெற்றதாக 

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 


விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை  தொரடியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மோதிய மற்றுமொரு பேருந்து; நால்வர் உயிரிழப்பு - 28 பேர் வைத்தியசாலையில் நிறுத்தப்பட்ட பேருந்து மீது பின்னால் சென்ற மற்றுமொரு பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றை மற்றுமொரு தனியார் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து  பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சிகிச்சை பலனின்றி மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும்  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னால் வந்த பேருந்து அதிவேகமாக பயணித்ததால்  இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை  தொரடியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement