ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி, இந்திரஜித் வரிசையில், வத்தளையைச் சேர்ந்த விஜய் லோசன் என்பவரும் பாட்டு பாடி அசத்தியிருக்கிறார்.
இந்நிலையில் இவர் சிறப்பாக தனது முதலாவது பாடலாக 'அவள் உலக அழகியே' பாடலை பாடி போட்டியை ஆரம்பித்துள்ளார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பலரும் சரிகமப போட்டியில் கலந்து கொள்கின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.
அத்துடன் எங்கெல்லாம் திறமைகள் ஒளிந்திருக்கிறதோ அவர்களுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி வாய்ப்பளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.