• Sep 21 2024

அடகு பிடிக்கும் இடத்தில் முற்றிய வாக்குவாதம்...!இளைஞன் உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Dec 25th 2023, 10:57 am
image

Advertisement

மாரவில கெடால்கொடவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வேறு ஒருவரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கைத்தொலைபேசியை மீட்கச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது இருவருக்கிடையில் அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிவடைந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்வ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அத்துடன், பொலிஸ் தடயவியல் பிரிவினரும், கை ரேகை பரிசோதனை பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்தக் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மேலும், சந்தேகநபரை கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும், மாரவில பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.



அடகு பிடிக்கும் இடத்தில் முற்றிய வாக்குவாதம்.இளைஞன் உயிரிழப்பு.samugammedia மாரவில கெடால்கொடவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர் வேறு ஒருவரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கைத்தொலைபேசியை மீட்கச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதன் போது இருவருக்கிடையில் அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிவடைந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.இதுபற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.அத்துடன், பொலிஸ் தடயவியல் பிரிவினரும், கை ரேகை பரிசோதனை பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.இந்தக் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.மேலும், சந்தேகநபரை கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும், மாரவில பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement