• May 03 2024

மொரோக்கோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 300 பேர் உயிரிழப்பு ! samugammedia

Tamil nila / Sep 9th 2023, 9:14 am
image

Advertisement

மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த புவியர்வு காரணமாக குறைந்தது 296 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுமார் 155 பேர் வரை காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த புவியதிர்வு மராகேஷுக்கு தென்மேற்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (22:11 GMT) புவியதிர்வு ஏற்பட்டது. X (முன்னர் Twitter) இல் உறுதிப்படுத்தப்படாத காணொளிகளில் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் வெடிப்புக்குள்ளான தெருக்களை காணக்கூடியதாக உள்ளது.

அத்துடன் பொதுமக்கள் பதற்றத்துடன் வீதிகளில் ஓடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

மராகேஷின் பழைய நகரத்தில் சில கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக குடியிருப்பாளர் ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

X இல் உள்ள பல காணொளிகள் கட்டிடங்கள் இடிந்து விழுவதைக் காட்டுகின்றன. எனினும் குறித்த கட்டிடங்கள் எந்த பகுதியில் இருந்தவை என அடையாளம் காண முடியாதுள்ளதாக பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது

மொரோக்கோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 300 பேர் உயிரிழப்பு samugammedia மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த புவியர்வு காரணமாக குறைந்தது 296 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அத்துடன் சுமார் 155 பேர் வரை காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த புவியதிர்வு மராகேஷுக்கு தென்மேற்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (22:11 GMT) புவியதிர்வு ஏற்பட்டது. X (முன்னர் Twitter) இல் உறுதிப்படுத்தப்படாத காணொளிகளில் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் வெடிப்புக்குள்ளான தெருக்களை காணக்கூடியதாக உள்ளது.அத்துடன் பொதுமக்கள் பதற்றத்துடன் வீதிகளில் ஓடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.மராகேஷின் பழைய நகரத்தில் சில கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக குடியிருப்பாளர் ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.X இல் உள்ள பல காணொளிகள் கட்டிடங்கள் இடிந்து விழுவதைக் காட்டுகின்றன. எனினும் குறித்த கட்டிடங்கள் எந்த பகுதியில் இருந்தவை என அடையாளம் காண முடியாதுள்ளதாக பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement