நாவலபிட்டி – மொன்றிகிறிஸ்ரோ பெருந்தோட்ட பகுதியில் தொட்டிலில் கழுத்து இறுகி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (27) மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரியொன்றில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் 9 வயது குழந்தை ஒன்றே கழுத்து இறுகி இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வீட்டிலிருந்த மற்றுமொரு சிறு குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, இந்த சம்பவம் நேர்ந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்